Thursday 23 June 2016

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பரிசோதனை

நாடு முழுவதும் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எதிர்காலத்தில் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வைத்திய பரிசோதனை
மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். வீதி விபத்துகளால் தினமும் 8 பேர் பலியாவதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரில் அதிகளவானோர் முச்சக்கர வண்டிகளில் கொண்டுவரப்படுவதால் முதலுதவி பயிற்சிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

No comments: