Thursday 7 April 2016

மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

பரீட்சை மண்டபத்தில் வைத்து மணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த சந்தேக நபரான  ஆசிரியரை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி ஒரு இலட்சம் ரூபாய் இரு சரீரப்பிணையில் விடுவித்தார். 


 இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பாடசாலை ஒன்றில் நேற்று முன்  (04) காலை முதலாம் தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தரம் 11 வகுப்பில் கல்வி பயிலும்  16 வயதுடைய குறித்த மாணவி பரீட்சை எழுதிக்கொண்டிக்கும் போதே பரீட்சை கடமையிலிருந்த ஆசிரியர் மாணவி மீது பாலியல் சேட்டை புரிந்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் சந்தேக நபரான 41 வயதுடைய ஆசிரியரை கைது செய்து  நேற்று (05) மன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

No comments: