Wednesday 25 March 2015

வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

பிரேம்...

 ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலய மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி (சமுர்த்தி) திணைக்களப் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஆலய முன்றலில் இடம்பெற்றது.



நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் மன்றத் தலைவர் எம்.நௌஷாட் மஹ்றுப் அனுசரணையோடு இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதேச செயலாளர் தனது பாரியாரோடு இணைந்து முதலாவது பயனாளிக்கான வாழ்வாதார உதவிகள் அடங்கிய பொதியினை வழங்கிவைத்தார். தொடர்ந்து ஏனையோருக்கான உதவிகள் நிகழ்வில் பங்குபற்றியிருந்த அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
அடுத்து குறித்த வாழ்வாதார உதவிகள் தொடர்பான பிரதேச செயலாளரது உரையும் அங்கு இடம்பெற்றது.

No comments: