Wednesday 25 March 2015

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எதிர்வரும் 08-04-2015,

பிரேம்...




காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் எதிர்வரும் 08-04-2015, 09-04-2015 ஆகிய இரு தினங்களிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ள பொதுசன அமர்வுகளை முன்னிட்டு அதில் பணியாற்றவுள்ள பிரதேச செயலக உத்தியோகத்தர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று, 24-03-2015 செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.
குறித்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிளியு.குணதாஸ தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கணக்காளர் கே.கேசகன், மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப் உட்பட கிராம உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
மேற்குறிப்பிடப்பட்ட பொதுசன அமர்வுகள் முதல்நாள் 08-04-2015 அன்று ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், மறுநாள் 09-04-2015 அன்று அக்கரைப்பற்று, நிந்தவூர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் பாதிப்பிற்குள்ளான மக்களுக்காகவும் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: