Thursday 19 March 2015

பழைய வழிபாட்டுத்தலத்திலுள்ள விநாயகர் விக்கிரகத்தினை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலத்திற்கு சமயக்கிரியைகளுடன் மாற்றும் நிகழ்வு

பிரேம்....

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தின் பழைய வழிபாட்டுத்தலத்திலுள்ள விநாயகர் விக்கிரகத்தினை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலத்திற்கு சமயக்கிரியைகளுடன் மாற்றும் நிகழ்வு இன்று (19) இடம்பெற்றது.
இதன்பொருட்டு கோளாவில் விக்கினேஸ்வரர் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களால் நடாத்தப்பட்ட சமயக்கிரியைகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கிரியைகளின் முடிவில் உத்தியோகத்தர்கள்களின் முயற்சியோடு குறித்த விக்கிரகம் அதன் புதிய பீடத்திற்கு இடமாற்றப்பட்டு சுபநேரத்தில் முதற் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.
சாகாம வீதியின் விஸ்தரிப்புப் பணிகளுக்கான பணிப்புரையின் பொருட்டு ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தின் குறித்த பழைய வழிபாட்டுத்தலம் விரைவில் அங்கிருந்து அகற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: