Sunday 16 November 2014

இலவச கல்விக்கருத்தரங்கு .




அம்பாரை  மாவட்ட சிவில் பிரைஜைகள் சமூகத்தினர் நடாத்தும்  க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கு .


2014ம் ஆண்டு  க.பொ.த சாதாரணதர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கு அம்பாரை மாவட்ட சிவில் பிரஜைகள் சமூகத்தினரால்  2014-11-06  இன்று ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது இதன்படி ஏ.எல் றிஸ்வான் ஆசிரியர் அவர்களின் விஞ்ஞான பாடமானது செயல்முறை ரதியாகவும் இலகுவான முறைகளிலும் மாணவர்களுக்கு பெறுமதி மிக்கவகையில் வழங்கப்பட்டது .


இக்கருத்தரங்கில் திருக்கோயில் வலயத்திற்குட்பட்ட 05 பாடசாலைகளைச்சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர் இதன்போது அம்பாரை மாவட்ட சிவில் பிரஜைகளில் ஆலோசகரும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசகருமான விரிவுரையாளர் எஸ்.குணபாலன் அம்பாரை மாவட்ட  சிவில் பிரஜைகளில் சமூகத்தின் பதிவாளர் எஸ்.வரதராஜன் மற்றும் பாடசாலை அதிபர் எஸ் விஸ்வநாதன் பிரதி அதிபர் எஸ் .பி.நாதன் போன்றேர்கள் கலந்து கொண்டனர்.



No comments: