Thursday 29 May 2014

வறிய மாணவர்களின் சீருடைகளுக்கான நன்கொடை வழங்கும் நிகழ்வானது

சுவிற்சர்லாந்து நாட்டில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த இந்துக்களால் நிருவகிக்கப்படும் பொதுத்தொண்டு அமைப்பான சூரிச் நகர அருள்மிகு சிவன் ஆலய அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தினால் அக்கரைப்பற்று, மகாசக்தி கிராமத்திலுள்ள பாலர் பாடசாலையில் கல்விபயிலும் வறிய மாணவர்களின் சீருடைகளுக்கான நன்கொடை வழங்கும் நிகழ்வானது இன்று 09-05-2014, வெள்ளிக்கிழமை காலை அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் சண்முகம் கார்த்திக் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சுதர்சினி ஆகியோருடன் அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் உத்தியோகத்தர்களும் மாணவர்களது பெற்றோரும் பங்குபற்றினர்.

கடந்த 07-05-2014, புதன்கிழமை சுவிஸ் நாட்டில் தனது ஏழாவது பிறந்ததினத்தைக் கொண்டாடிய என்.நிலவன் எனும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த சிறுவனது குடும்பத்தினரால் அன்பே சிவம் அமைப்பினூடாக வறிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அத்தியாவசிய உதவிக்காக நன்றி கூறிய பிரதேச செயலாளர், கவடாப்பிட்டி கிராமத்தில் குடிநீர் வசதியின்றி அல்லலுற்ற மக்களுக்கு அவ்வமைப்பினால் பொதுக்கிணறொன்று அமைக்கப்பட்டுவருவதையும் அங்கு நினைவுகூர்ந்தார்.

இதன்போது குறித்த பாலர் பாடசாலையில் கல்விகற்கும் 16 வறிய மாணவர்களின் சீருடைகளுக்கான மாதிரியும் நன்கொடையும் பிரதேச செயலாளர் முன்னிலையில் அன்பே சிவம் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரால் அப்பாடசாலை ஆசிரியையிடம் கையளிக்கப்பட்டன.

No comments: