Thursday 2 April 2020

விபத்தில் ஒருவர் பலி

haran
(செங்கலடி நிருபர் - சுபா)
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிதேசத்திலுள்ள பண்ணை ஒன்றில் சென்ற உழவு இயந்திரம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதை செலுத்திச் சென்ற சாரதி உயிரிழந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.




பனிச்சங்கேணி வாகரை பிரதேசத்தைச் சோந்த 22 வயதுடைய என். சுதர்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பண்ணையில் கடமையாற்றிவரும் நபர் சம்பவ தினமான நேற்று (01.04.2020) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்து பண்ணைக்கு வேலைக்குச் சென்ற நிலையில் மாலை 4 மணியளவில் பண்ணையிலுள்ள உழவு இயந்திரத்தை எடுத்து பண்ணைப்பகுதியில் செலுத்திய போது பண்ணையில் இருந்த பனை மரத்துடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.







மட்டக்களப்பில் உழவு இயந்திரம் பனை மரத்துடன் மோதி விபத்து: சாரதி பலி Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: