Wednesday 1 April 2020

தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணி

haran
(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா அச்சம் காரணமாக தொழிலை இழந்த குடும்பங்களுக்கான நிவாரணப்பணியை புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.




இதற்கமைவாக ஆலையடிவேம்பு அகத்திக்குளம் பிரதேசத்தில் வாழும் 100 குடும்பங்களுக்கான 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் ஏற்பாட்டில் சமூக நேயன் வே.வாமதேவனின் ஊடாக நோர்வே தமிழ் உறவுகள் வழங்கி வைத்த நிவாரணப் பொருட்களை அக்கரைப்பற்று அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினர் முன்னின்று வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் வே.வாமதேவன் உட்பட அம்மன் மகளின் பவுண்டேசன் உறுப்பினர்கள் அன்புக்கரங்கள் இளைஞர் அமைப்பினர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதே நேரம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அன்புக்கரங்கள் அமைப்பால் அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதேநேரம் கடந்த நாட்களை விட இன்று அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதுடன் மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களும் தேவையான அளவிற்கு சந்தையில் விற்பனைக்காக குவிந்திருந்ததையும் காண முடிந்தது.











கொரோனா தொற்றின் எதிரொலி - நிர்க்கதியான குடும்பங்களுக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்போடு தனியார் தொண்டு நிறுவனங்களால் நிவாரணம் வழங்கி வைப்பு Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: