Friday 15 March 2019

15 பல்கலைகழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை


கிழக்கு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த 15 மாணவர்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.


பகுடிவதையில் ஈடுப்பட்டதாக குறிப்பிட்டே இந்த மாணவர்களுக்கான வகுப்புத்தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் பரீட்சை இடம்பெரும் இந்த காலப்பகுதியில் இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாணவர்களின் கல்வி நலன் கருதி வகுப்புத்தடை உத்தரவினை உடனடியாக நீக்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்திய பீட பெற்றோர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
haran

No comments: