Friday 26 September 2014

ப்ல்லின கலை நிகழ்வுகளின் அரங்கேற்ற வைபவம்

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகத்தின் கலாசாரப் பிரிவு நடாத்திய பல்லின கலை நிகழ்வுகளின் அரங்கேற்ற வைபவம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் இன்று, 25-09-2014 வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகக் கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் கலந்துகொண்டார். அத்துடன் கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோரும், விசேட அதிதியாக அம்பாறை மாவட்ட உதவிச் செயலாளர் ஜீ.வி.சிந்தன உதார நாணயக்காரவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூவினங்களையும் சேர்ந்த இந்து, இஸ்லாமிய, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆசியுடன் இடம்பெற்ற இக்கலாசார நிகழ்விற்குக் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கலைஞர்களும் கலந்துகொண்டதுடன், தமது கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளையும் அரங்கேற்றினர்.
அடுத்து பல்லின கலை நிகழ்வுகளை மேலும் சிறப்பிக்கும் வகையில் கலாசார மேம்பாடு குறித்த அதிதிகளின் உரைகளும் அங்கு இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளை அரங்கேற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

No comments: