Monday 18 November 2013

"ஆலையடிவேம்பில் ஜனாதிபதியின் பிறந்தநாள் விசேட பூஜை நிகழ்வு"



இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு நல்லாசிகள் வேண்டி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு, பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஜனாதிபதியின் பிறந்தநாளான 18.11.2013, திங்கட்கிழமையன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளரின் அழைப்பினை ஏற்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன இவ்வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் ஆலயத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அங்கத்தவர்களும் பங்குபற்றிய இப்பூஜை நிகழ்வுகளை ஆலயக்குரு சிவஸ்ரீ.ப.கேதீஸ்வரன் அவர்கள் நடாத்திவைத்தார்.

இங்கு வனவிலங்குகளால் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெள்ளம், சுழல்காற்று போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்றவர்களுக்கு பிரதேச செயலகத்தின் மூலமான சமுகசேவைகள் அமைச்சின் நிதியுதவிக் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. இவற்றைப் பிரதேச செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் வழங்கிவைத்தனர்.


 REPORTER 
Like ·  ·  

No comments: