Friday 4 October 2013

உகந்தமலை திருமுருகன் திருத்தல புராணம் நூல் வெளியீட்டுவிழா




கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த உகந்தமலை முருகன் ஆலயத்தின் சைவப்புலவர். சைவசித்தாந்த பண்டிர்,சோதிடர் .சிவஸ்ரீ.லோகநாதக் குருக்கலால் இயற்றப்பட்ட  உகந்தமலை திருமுருகன் திருத்தல புராணம் எனும் நூல் வெளியீட்டுவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஆலய திருப்ணிச் சபை செயலாளர் கே.சிறிபஞ்சாடசரம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ் நிகழ்வில் அதிதிகளாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன், லாகுகல பிரதேச செயலாளர்,எல்.ஏ.சோமரத்தின, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஜ.எம்.தௌபீக், திருக்கோவில் பிரதேச செயலாளர், எம்.கோபாலரெத்தினம், ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வே.ஜெகதீசன்,காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன். ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியீடுசெய்யவுள்ளனர் என ஆலய வண்ணக்கரும் திருப்பணிச் சபையினரும் தெரிவித்தனர்.

No comments: