ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும்
புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்!
————— [1/20]
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்
நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்
சிற்றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய். ——-[2/20]
முத்தன்ன
வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோ மறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். ——-[3/20]
அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோ மறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய். ——-[3/20]
ஒண்ணித் திலநகையாய் இன்னம்
புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும்
வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம்
அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப்
போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத
விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக்
கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோம்
நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ
ரெம்பாவாய்.
——-[4/20]
மாலறியா நான்முகனுங் காணா
மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க
ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக்
கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
——-[5/20]
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட்
கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன்
வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ
ரெம்பாவாய். ——-[6/20]
அன்னே இவையுஞ்
சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். ——–[7/20]
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். ——–[7/20]
கோழி சிலம்பச் சிலம்புங்
குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண்
சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்
கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். ——-[ 8 /20 ]
–
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்
பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப்
பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன்
சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே
பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப்
பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். ——— [ 9 / 20 ]
–
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு
பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப்
பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும்
துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்
பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார்
ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய். ——–[ 10 / 20 ]
மொய்யார் தடம்பொய்கை புக்கு
முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண்
ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா
சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ
ரெம்பாவாய்.
————— [ 11 /20 ]
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம்
ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே
தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும்
எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப
வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல்
வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான்
பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.
———-[12 / 20]
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப்
பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும்
அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து
சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும்
போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து
பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும்
புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
——[ 13 / 20]
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ
மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத்
தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த
பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய். ———[
14 / 20 ]
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை
கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்
தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர்
ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார
நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
—– [15 /20 ]
முன்னிக் கடலைச் சுருக்கி
யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள்
இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி
திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித்
திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான்
அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய். ——– [ 16 /20 ]
செங்கண வன்பால் திசைமுகன்பால்
தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக்
கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும்
எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ்
சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
—— [ 17 / 20 ]
அண்ணா மலையான் அடிக்கமலஞ்
சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ
றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள்
தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்
பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும்
வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான்
கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
—— [ 18 / 20 ]
உங்கையிற் பிள்ளை உனக்கே
அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம்
அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்
றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள்
சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ்
செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங்
காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன்
நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ
ரெம்பாவாய்.
——— [ 19 / 20 ]
–
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ்
செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம்
பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம்
பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம்
இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும்
பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ
ரெம்பாவாய்.
——— [ 20 / 20 ]
01
போற்றி !
என் வாழ்முதலாகிய பொருளே !
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க்
கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே !
ஏற்றுயர்
கொடியுடையாய் ! எனையுடையாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
2.
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !
3.
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
4.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
5.
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !
6.
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !
7.
"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !
8.
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !
09.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !
10.
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !
தந்தையர் தினம்
குணசீலன் நிலோஷ்....
அன்புப் பொய்கையாய்
அடைக்கலக் கோட்டையாய்
பற்றுக் கோடாய்
பாதுகாவலாய்
என் விடியலுக்கு வித்திட்ட
இதய சூரியனே…!
நடக்கவே தெரியாத
என்னை
வானில்
சிறகடிக்க வைத்த
இதய தெய்வமே…!
நான் இலட்சியத்தை அடைய
உம் முதிர்ந்த அனுபவத்தை
அடித்தளமாக்கித் தந்த
என்
முதல் ஆசானே…!
என்னக்காக
நீர் செய்த
தியாகங்கள் பெரிது
என் நெஞ்சில் உமக்கிருக்கும்
இடமும் பெரிது
எனதன்புத் தந்தையே…!!
சாதனை செய்ய விருப்பமா
1. கருமமே கண்ணாயிரு !
2. இடை விடாது முயற்சி செய் !
3. முன்னேறியவர்களை கவனி !
4. 'முடியும்' என்ற நம்பிக்கை கொள் !
5. இலட்சியம் தாகமாய் இருக்கட்டும் !
6. கல்வி பயில்வதில் தீவிரம் காட்டு !
7. மனதை உறுதி செய் !
8. சூழ்நிலையை பயன்படுத்து !
9. தன் நம்பிக்கையை கொண்டிரு !
10. எண்ணங்களை கட்டுக்கள் வைத்திரு !
11. சாதாரண காரணம் அ10யினும் சிறப்புடன் செய் !
12. தைரியம் போன்று தனிமை தேடு !
13. தோல்வி மீது நட! துக்கத்தை தாங்கு !
14. தனிச்சிறப்பாக செயற்படு !
15. கவனம் சிதறாதே !
16. கடவுளை நம்பு உன்னை ஒரு காரணத்திற்காகவே உருவாக்கி உள்ளார் !
நடராஜன் ஹரன்
No comments:
Post a Comment