பிரேம்.....
ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் கீழ் செயற்படும் கிராமமட்ட மகளிர் சமுக முன்னேற்றக்குழுக்களின் தலைவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சியும், நிருவாகக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி நடாத்துதல் சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வும் ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் இன்று (08) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்திப் பிரிவின் மகா சங்கப் பணிப்பாளர் ரி.பரமானந்தம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் உள்ளகக் கணக்காய்வாளர்களான ஜனாப். எம்.அமீர் அலி, கே.ரினோஷன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்விற்கு வளவாளராக தலைமைத்துவப் பயிற்றுவிப்பாளர் ரி.சுரேஜினி கலந்துகொண்டார்.
தொடர்ந்து ஒவ்வொரு கிராமமட்ட மகளிர் சமுக முன்னேற்றக்குழு உறுப்பினர்களும் தமக்கான நிருவாகக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி நடாத்துதல் சம்மந்தமான பயிற்சியினை ஆலையடிவேம்பு தெற்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் கே.அசோக்குமார் முன்னெடுத்தார்.
No comments:
Post a Comment