நாட்டில் நிலவும் வீடில்லா பிரச்சினை மற்றும் வீட்டு வசதிகளின்றிய பிரச்சினைகளை அடுத்த 05 முதல் 10 ஆண்டுகளுக்குள் தீர்க்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் வீட்டுவசதிகளுக்கான உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் நேற்றுமுன்தினம் (03) பங்கேற்று உரை நிகழ்த்தியபோதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த கால அரசாங்கங்களின் நிர்வாகங்களைப் போலல்லாமல், சரியான முறையின் மூலம் பொருத்தமான நபர்கள் மட்டுமே இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முன்னைய அரசாங்கம் வீட்டுவசதிகளின் விளம்பரங்களின் பிரசாரங்களுக்காக மட்டும் 520 மில்லியன் ரூபாவை செலவிட்டது. பொதுமக்களின் பணமே இதற்காகச் செலவிடப்பட்டது. எமது அரசாங்கம் 140 பேருக்கு வீட்டு வசதிகளைச் செய்து கொள்வதற்கான உதவிகளைச் செய்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்கும். லேும் எண்பதுக்கும் மேற்பட்ட அரச ஊழியர்களுக்கு ரூ. 01 மில்லியன் ரூபா கடன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment