மண்முனை பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களப்பிரிவின் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு 06.07.2017 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி N . சத்தியானந்தி அவர்கள் தலைமையில் 06.07.2017 அன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் P .குணரத்தினம், பிரதேச செயலாளர் திருமதி N.சத்தியானந்தி, மண்முனை பற்று பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் ஏ.. தனேந்திரராசா, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். இராசலிங்கம், மாவட்ட முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது முதற் கட்டமாக 43 பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
haran






No comments:
Post a Comment