
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் காணாமல் போன, முச்சக்கர வண்டி தொடர்பாக மேற்கொண்ட விசாரணையையடுத்து அக்கரைப்பற்று, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் இருந்து, 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து 10 முச்சக்கர வண்டிகளும், 1 மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்படட முச்சக்கர வண்டிகள் அனைத்தும் இயந்திர மற்றும் அடிசட்ட இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டிகளின் பதிவு இலக்கங்களும் மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இயந்திர மற்றும் அடிச்சட்ட இலக்கங்களை மாற்றியதன் பேரில் 2 சந்தேக நபர்களும், திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
haran
No comments:
Post a Comment