(சித்தா)

இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் முதல் நாள் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் மன்முனை தென் எருவில் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.வி.திரவியராசா அவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
இரண்டாம் நாள் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளரும் இத்திட்டத்தின் ஆலோசகருமான திரு.பூ.உதயகுமார் கலந்து பல்வேறு தொழில் நுட்ப விளக்கங்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார். மூன்றாம் நாள் செயலமர்வில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பார்த்தீபன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
haran
No comments:
Post a Comment