அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக சாராய போத்தல்கள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் 25, 30 வயதுகளையுடைய இரு நபர்களை தபால் சந்தியில் நேற்றுப் புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திடீர் பரிசோதனையின்போது இவர்களிடமிருந்து 24 போத்தல் சாரயம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment