ஹண்டிகப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உதவிப் பணிகளுக்கான முகாமையாளர் ஏ.ஜி.கலீலுர் ரஹ்மான் மற்றும் திட்ட உத்தியோகத்தர் எஸ்.நவராஜ் ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தனராஜன், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கு உணவுக் கொள்வனவுக்கான முதலாம் மற்றும் இரண்டாங்கட்ட நிதியுதவிகள் பிரதேச செயலாளராலும் ஏனைய உத்தியோகத்தர்களாலும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த மாதம் இதன் இறுதிக்கட்டக் கொடுப்பனவு குறித்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், இச்செயற்திட்டத்திற்கான பின்தொடர் நடவடிக்கைகளில் ஹண்டிகப் நிறுவனத்துடன் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Regards,
No comments:
Post a Comment