( -க.விஜயரெத்தினம்)

இந்த நினைவுநாளை நினைவு கூர்ந்து இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினாலும்,களுவாஞ்சிகுடி ஆலயங்களின் முகாமைத்துவசபையினால் ஒழுங்கு செய்யப்பட்டதாகும்.இந்த நினைவுதினத்தில் களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த குடும்பங்களின் உறவுகள்,பொதுமக்கள் கலந்துகொண்டு ஆத்ம ஈடேற்றத்திற்காக பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதன்பின்பு உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.11பேருக்கும் உறவினர்களால் சுடரேற்றி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம்-சுகுணன்,பிரபல வர்த்தகர் கே.ரஞ்சிதமூர்த்தி,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும்,இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இராஜபுத்திரன்-சாணாக்கியன்,குரு மண்வெளி சிவசக்தி வித்தியாலய அதிபர் கே.சத்தியமோகன் ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் என்.பவளேந்திரன்,இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் பிரதிகள்,ஊடகவியலாளர்கள், உட்பட நூற்றுக்கான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.