Pages
▼
Monday 30 December 2019
Wednesday 25 December 2019
Sunday 22 December 2019
Friday 20 December 2019
Tuesday 17 December 2019
Wednesday 4 December 2019
Friday 22 November 2019
மூத்த ஊடகவியலாளர் காலமானார்
haran
மூத்த ஊடகவியலாளர் காலமானார்
மட்டக்களப்பின் பத்தரிகைத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் அவர்கள் நேற்று 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார் இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி ,சூடாமணி ,தினபதி ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.
மூத்த ஊடகவியலாளர் காலமானார்
மட்டக்களப்பின் பத்தரிகைத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் அவர்கள் நேற்று 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார் இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி ,சூடாமணி ,தினபதி ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday 14 November 2019
ஒருவர் பொல்லால் தாக்கி கொலை
haran
மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடனான வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கணவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனைத் தடுக்கும் நோக்கில் மனைவி, தனது கணவனை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான நபர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலின் போது காயமடைந்த 16 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடனான வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கணவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனைத் தடுக்கும் நோக்கில் மனைவி, தனது கணவனை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான நபர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலின் போது காயமடைந்த 16 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
Wednesday 13 November 2019
Monday 7 October 2019
Monday 30 September 2019
Monday 16 September 2019
Sunday 15 September 2019
எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு
எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளை கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு அழைப்பு
--க-சரவணன்-
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு கிழக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவிக்குமுகமாகவும் பேரணியை வலுவூட்டுமுகமாகவும் அன்றைய தினம் 16 ம் திகதி திங்கட்கிழமை கிழக்கு முழுவதிலும் பூரண கதவடைப்பினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு கிழக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவிக்குமுகமாகவும் பேரணியை வலுவூட்டுமுகமாகவும் அன்றைய தினம் 16 ம் திகதி திங்கட்கிழமை கிழக்கு முழுவதிலும் பூரண கதவடைப்பினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது
Friday 13 September 2019
Friday 30 August 2019
Thursday 22 August 2019
Monday 19 August 2019
அடிப்படைத் திறன் அபிவிருத்தி
(ரவிப்ரியா)
அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பணித்தளத்திலான அடிப்படைத் திறன் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை சார்பான விருந்தோம்பல் பயிற்சியின் முதற்கட்டத்தை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ட்ரீட்டு விடுதியில் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவர் எம்.எச்.எம். நளீம் தலைமையில் வெள்ளியன்று காலை (16)நடைபெற்றது, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்து கொண்டார்.
இருபதுக்கு இருபது கிரிகெட் மென்பந்து
haran
Monday, August 19, 2019
Friday 9 August 2019
Wednesday 7 August 2019
Tuesday 9 July 2019
Tuesday 4 June 2019
Wednesday 22 May 2019
Monday 20 May 2019
Saturday 18 May 2019
சிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
Niloch.K
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் நடைபெற்றது .
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில் நாட்டில் அவசரக்கால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் படையினர் மற்றும் புலனாய்வாவார்களின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றன.
சிறப்பாக இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு கிழக்கு ) ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நேர்த்தியாக நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது
அந்த வகையில் இன்றைய தினம் தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்துத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது தாய் இறந்துகிடப்பதை கூட அறியாது அந்த தாயின் மார்பில் பால் குடித்தும் அவ்வேளையில் தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக நின்று உயிரிழந்த உறவுகளுக்காகச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மக்கள் உணவாக உட்கொண்டு பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா ,சிவமோகன் ,சிவசக்தி ஆனந்தன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,செல்வம் அடைக்கல நாதன் , முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் , சிவநேசன் ,ஐங்கரநேசன் ,முன்னாள் மாகாசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ,ரவிகரன் ,கமலேஸ்வரன் ,புவனேஸ்வரன் ,சயந்தன் .கஜதீபன் ,யாழ் மாநகர மேஜர ஆர்னோல்ட் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .
அம்பாறையிலும் கண்ணீர்மல்க இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
Niloch.K
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மே18 முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டிய தமிழ் உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீர்மல்க தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நினைவேந்தல் நிகழ்வானது அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தலைமையில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றன.
இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டு தாய்மார் கண்ணீர்மல்க மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்நீத்த தமது உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டிய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இந் நினைவேந்தல் நிகழ்வில் தாய்மார்கள் கலந்து கொண்டதுடன் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலிகளை செலுத்தினர்.
வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு
Niloch.K
புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்க ரத்ண தேரர் மகிழ்ச்சியுடன் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்.
அதாவது விசேடமாக தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக சேர்ந்து இப்பிரதேசத்தில் இந்நாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையாக கட்டப்படுவது வரலாற்றில் முதல்தடவையாகும்.மக்கள் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கு வாழ்கின்றார்கள்.புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்தும் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையாக கட்டப்படுவது வரலாற்றில் முதல்தடவையாகும்.மக்கள் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கு வாழ்கின்றார்கள்.புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்தும் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் கடந்த 21 ஆம் தினம் இடம்பெற்ற அசாதாரண நிலைமையை அடுத்து மிகவும் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது.இதற்கு எமது முப்படையினருக்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் எல்லோரும் சமாதானமாக வாழ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.
மேலும் முப்படையினரின் பாதுகாப்புடன் வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி மேற்படி அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
N |
மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி
Niloch.K
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது.
கொளுத்தும் வெய்யிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்து, இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக கண்ணீர் மல்க உணர்ச்சிபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
நாட்டில் தற்பொழுது நடக்கும் அசம்பாவிதங்களை பொருட்படுத்தாது மக்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வந்து படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைந்துருகி அஞ்சலி செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.
யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…! 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் விரிவுரைகள்…!!
NILOCH.K
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களு க்கான கல்விநடவடிக்கைகள் யாவும் எதிர்வரும்22.05.2019 (புதன்) ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண் டீபன்அறிவித்துள்ளார்.
கலைப்பீடம்(இராமநாதன்நுண்கலைப்பீடம்உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகிய பாடங்களுக்கும் சித்தமருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.கடந்த ஏப்ரல்21 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனையபீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும்27 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.
விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும்21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திரும்புமாறும், விடுதி களின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்து வரவேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.