Pages

Saturday 18 May 2019

மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

Niloch.K
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது.



கொளுத்தும் வெய்யிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்து, இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக கண்ணீர் மல்க உணர்ச்சிபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.



நாட்டில் தற்பொழுது நடக்கும் அசம்பாவிதங்களை பொருட்படுத்தாது மக்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வந்து படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைந்துருகி அஞ்சலி செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.





No comments:

Post a Comment

Walden