Pages

Monday 20 May 2019

நீரில் மூழ்கி பலி

க.விஜயரெத்தினம்
  
அம்பாறை களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறு, கடல்நாச்சி அம்மன் ஆலயத்துக்கு எதிரே உள்ள நீரோடையில், நண்பர்களுடன் இணைந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

அவ்விளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமோர் இளைஞரும் நீரில் மூழ்கிய நிலையில் நண்பர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில் ரீ.திமோத்தி ஆகாஷ் (வயது 20) என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இவர் இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தமக்கது.
மேற்படி இளைஞர், செல்பி எடுத்தவாறு நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்தபோதே, சேற்றில் சிக்கியுள்ளதுடன் அதிலிருந்து மீள முடியாமல் தத்தளித்து மூழ்கியுள்ளார் என்று  தெரியவருகிறது.
நீண்டநேர தேடுதலின் பின்னரே, நீரோடையிலுள்ள சேற்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

Walden