Pages

Saturday 18 May 2019

யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…! 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் விரிவுரைகள்…!!

NILOCH.K



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களு க்கான கல்விநடவடிக்கைகள் யாவும் எதிர்வரும்22.05.2019 (புதன்) ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண் டீபன்அறிவித்துள்ளார்.
கலைப்பீடம்(இராமநாதன்நுண்கலைப்பீடம்உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகிய பாடங்களுக்கும் சித்தமருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.கடந்த ஏப்ரல்21 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனையபீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும்27 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.
விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும்21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திரும்புமாறும், விடுதி களின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்து வரவேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Walden