ஏனைய கட்சிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலில் வெற்றி பெறும். அதனூடாக தேசிய ரீதியான உரிமையோடு கூடிய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கு (றொபின்) தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட மக்களால் நேற்று(13) அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்பின்போது இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் அம்பாரை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்;னர் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
அதிகளவான ஆதரவாளர்கள் அவரது வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
No comments:
Post a Comment
Walden