வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் நேற்று (12.07.2015) இடம்பெற்ற விபத்தில் கார் ஒன்றின் முன்பகுதி முற்றாக சேதமடைந்த போதும் சாரதி எவ்வித காயமுமின்றி தப்பினார். சாகாமம் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற கார் கோளாவில் பிரதேசத்தின் வீதி அருகில் ஆலய பதாதையை கட்டுவதற்காக நடப்பட்டிருந்த மரமொன்றுடன் மோதியதனாலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது வீடொன்றிற்கு இணைப்பு செய்யப்பட்ட மின்சார வயர் ஒன்றும் அறுந்து வீழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment
Walden