Pages

Thursday 8 December 2016

அத்துமீறி உட்பிரவேசித 11 கைது

நீதிமன்றினால் தடைசெய்யப்பட்ட பிரதேசத்திற்குள் அத்துமீறி உட்பிரவேசித   கைது


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டைமடு வனபரிபாலன பிரதேசத்தில் சட்டவிரோதமாக அத்துமீறி உட்பிரவேசித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் 11பேர் நேற்று (05)மாலை கைது செய்யப்பட்டார்கள்.



நேற்று மாலை வனஇலாக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இவர்கள் திருக்கோவில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுடன்  உழவு இயந்திரம் ஒன்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த வட்டைமடு பிரதேசம் நீதிமன்றினால் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Walden