Pages

Monday 8 August 2016

குருபெயர்ச்சி மகா யாகம்

அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் குருபெயர்ச்சி மகா யாகம் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. நவக்கிரகங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் எனப்படும் வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகின்றார்.
இம்மாற்றமானது நிகழும் தினம் திருக்கணித பஞ்சாங்கத்தில் 11ஆம் திகதி எனவும் வாக்கிய பஞ்சாங்கத்தில் 02ஆம் திகதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பாசுபதேசுவரர் ஆலய கும்பாபிசேகம் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நடைபெற்றதனாலும், குருபகவான் மாற்றம் பெறும் 11ஆம் திகதி குருபகவானுக்குரிய வியாழக்கிழமையில் வருவதானலும் அன்றையதினமே மகாயாகம் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்தது. குரு பார்த்தால் கோடி நன்மை என்பது ஆன்றோர் வாக்கு. இக்குருபகவானின் மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் குரு வழிபாடு சிறந்த பரிகாரமாகும். ஆகவே இதனை கருத்திற்கொண்டு மக்களின் நன்மை கருதி குருபகவானின் திருவருள் வேண்டி நடைபெறும் தோச நிவர்த்தி குருப்பெயர்ச்சி யாகத்தில் பாதிப்புகள் ஏற்படும் என கருதும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. யாகத்துக்குரிய பொருட்கள்  கோவிலில்; வழங்கப்படும் எனவும் அன்றையதினம் விசேட அபிஷேக அர்ச்சனைகள் இடம்பெறுவதுடன் பூஜையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும் மஞ்சள் நிறக்காப்பும் அடியவர்களுக்கு வழங்கப்படும். மகாயாகத்தின் கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ. அ.கு.மூர்த்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெறும். 

No comments:

Post a Comment

Walden