Pages

Thursday 30 June 2016

சட்டவிரோதமாக மின்சாரம் இருவர் கைது

அம்பாறை  ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரம் பெற்ற இரண்டு பேரை, புதன்கிழமை (29) இரவு, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 இலங்கை மின்சார சபையின் அம்பாறை பிராந்திய அலுவலக புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோளாவில்-1ஆம் பிரிவைச் சேர்ந்த நபரொருவரும் 
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய முன் வீதியைச் சேர்ந்தவர் மற்றொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாகவும் இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Walden