Pages

Monday 18 January 2016

விபத்தில் ஒருவர் பலி


அம்பாறை, அட்டாளைச்சேனை கோணாவத்தை பெரிய பாலத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில்  அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்

 உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.   காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர். மீராசாகீப்பின் சைக்கிளுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதில் தலையில் படுகாயமடைந்த  மீராசாகீப் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன் பின்னர் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அன்றையதினம் இரவு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்தவரும்  மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து வந்தவரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ஏ.ஆர்.ஆக்கீலா உத்தரவிட்டார். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரை நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று   பார்வையிட்ட பின்னரே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.   

No comments:

Post a Comment

Walden