பொத்துவில், பொலிஸ் கோமாரி முருங்கந்தனை வயல் பிரதேசத்தில், வேளாண்மை காவலுக்குச் சென்ற 18 வயது இளைஞனொருவன் சனிக்கிழமை (26) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்
கோமாரி 2ஆம் பிரிவைச் சேர்ந்த 18 வயதுடைய முத்துக்குமார் தனுஜன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
கோமாரி முருங்கந்தனை வயல் பிரதேசத்துக்கு, வழமைபோல வேளாண்மை காவலுக்காக வெள்ளிக்கிழமை (25) இரவு, குறித்த இளைஞன் சென்றுள்ளான்.
குறித்த வயல் பிரதேசத்தில் தலையில் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இது தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment
Walden