Pages

Tuesday 15 September 2015

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மின்னேற்றல்..

வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 
மின்னை மீள் நிரப்பும் நிலையங்களின் உபகரண கட்டமைப்பு நாடளாவிய ரீதியாக இல்லாமையினால் நுகர்வோர் நெருக்கடியை எதிர்நோக்குவதாக அமைச்சர் தெரிவித்தார். 
இதேவேளை, எதிர்காலத்தில் மோட்டார்சைக்கிளின் பாவனையை குறைத்து, துவிச்சக்கரவண்டியின் பாவனையை அதிகரிக்குமாறு அமைச்சர் சந்திம வீரக்கொடி பரிந்துரை செய்துள்ளார்.

No comments:

Post a Comment

Walden