Pages

Tuesday 11 August 2015

விபத்தில், சிறுவன் படுகாயம;

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று (11) மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்,  படுகாயமடைந்த சிறுவன் ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர். கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டியில் சென்ற சிறுவனை மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக அக்கரைப்ற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Walden