Pages

Monday 24 August 2015

இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை

அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு 100 மெற்றிக்தொன் கரும்பு அறுவடை செய்ய முடியுமென கரும்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கரும்பு அறுவடையை மிக இலகுவாகவும் விரைவாகவும், அறுவடை செய்ய முடிவதாகவும் இதனால் தாங்கள் கூடுதலான இலாபத்தை பெறமுடியுமென கரும்பு உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கரும்பு அறுவடைக்கு வேலையாட்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றதாகவும் கரும்பு உற்பத்தியாளர்கள் கூறினார்கள். இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்து வருவதையிட்டு கரும்பு உற்பத்தியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

Walden