Pages

Monday 27 July 2015

குப்பை கொட்டியவருக்கு அபராதம்

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வீதியில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  நபருக்கு 2,000 ரூபாய் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், திங்கட்கிழமை (27) அபராதம் விதித்துள்ளார்.
குறித்த நபரை கடந்த 15ஆம் திகதி கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார், இவர் மீது வழக்குத் தொடுத்திருந்தனர். 
இவ்வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Walden