Pages

Friday 26 December 2014

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி..

news by-- .வரதராஜ்

அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது தம்பிலுவில் பெரிய

முகத்துவாரத்தில் அமைந்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் 2014.12.26


வெள்ளிக்கிழமை காலை 9.05 மணியளவில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் பதிவாளரும்

ஆசிரியருமான எஸ்.வரதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின்

ஆலோசகரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களும்

அக்கரைப்பற்று, தம்பட்டை பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 50 இற்கும் மேற்பட்டோர்

இந் நிகழ்வில் கலந்து கொண்டணர். இப் பகுதியில் பெய்து வருகின்ற அடைமழை மத்தியிலும் சுனாமியால் உயிர்

நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் பூக்கள் மற்றும் ப+மாலை அணிவித்து தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை

சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment

Walden