ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகாசக்தி நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற ஏழு பாலர் பாடசாலைகளிலும் கல்விபயிலும் சிறார்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி இன்று 07-05-2014 காலை, மகாசக்தி நிறுவனத்தின் தலைமையக மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 09-05-2014 மாலைவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார். அவருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், திருக்கோவில் கல்வி வலய முன்பள்ளிகளுக்கான உதவிப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன் உட்படப் பல பிரமுகர்கள் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததுடன் பாலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் இணைந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
எதிர்வரும் 09-05-2014 மாலைவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார். அவருடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், திருக்கோவில் கல்வி வலய முன்பள்ளிகளுக்கான உதவிப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன் உட்படப் பல பிரமுகர்கள் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததுடன் பாலர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் இணைந்து கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment
Walden