Pages

Friday 2 May 2014

பாலர் பாடசாலைகளுக்கான வலைப்பின்னலின் மாதாந்தக் கலந்துரையாடல்


ஆலையடிவேம்பு பிரதேசப் பாலர் பாடசாலைகளுக்கான வலைப்பின்னலின் மாதாந்தக் கலந்துரையாடல் கடந்த 28-04-2014, திங்கட்கிழமையன்று அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.ஜெகதீசன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் இவ்வலைப்பின்னலின் செயலாளர் பி.மோகனதாஸ், பிரதேச செயலக கிராமசேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஈ.குலசேகரன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தன், உளவள ஆலோசகர் திருமதி.சப்றினா ரஸீன், சிறுவர் உள மற்றும் சமுக பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி மற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.யசோதா கபிலன், மகாசக்தி சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் எஸ்.திலகராஜன், களம் சமுக நல்வாழ்வு அமைப்பின் பாலர் பாடசாலை வேலைத்திட்ட இணைப்பளார், பாலர் பாடசாலை ஆசிரியைகள் சார்பில் ஒருவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு பாலர் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள், நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வலைப்பின்னலின் கடந்தகால செயற்பாடுகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது இவ்வாறான மாதாந்தக் கலந்துரையாடல்களை ஒவ்வொரு மாதமும் இறுதித் திங்கட்கிழமையன்று பிற்பகலில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதோடு, அடுத்த கலந்துரையாடல் எதிர்வரும் 26-05-2014 அன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

No comments:

Post a Comment

Walden